Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி

நவம்பர் 07, 2023 01:05

நாமக்கல்: நேர்மையே வாழ்க்கையின் வழி என்பதை இலக்காகக் கொண்டு கண்காணிப்பு வாரம் அக்டோபர் 26 முதல் நவம்பர் 5 வரை நாடெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும்
அறிவியல் கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில்
ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியினை மாணவிகள் மேற்கொண்டனர்.

ஒரு நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றம்
ஆகியவற்றிற்கு ஊழல் தடையாக உள்ளது. இந்திய குடிமகனாகிய நான் ஊழல் இல்லாத இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஹேமலதா செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்